சுக்கு மல்லி காபி

மழைகாலங்களில் சுக்கு மல்லி காபி குடிப்பது ரொம்ப நல்லது.தொண்டை கரகரக்கும் போது,சளி பிடித்திருக்கும் போது இந்த காபி குடிப்பது இதமாக இருக்கும்.

இந்த பொடியை  செய்து காற்றுபுகாத டப்பாவில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை -1/4 கப்

மிளகு -1 டீஸ்பூன்

ஏலக்காய் -2

சுக்கு -1 அங்குல துண்டு
பனை வெல்லம்  - 1/3 கப்

செய்முறை விளக்கம்:

*வெறும் கடாயில் மல்லி விதை,மிளகு,ஏலக்காய் இவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

*சுக்கு தோலினை சுரண்டிவிட்டு லேசாக நசுக்கி கொள்ளவும்.

*அனைத்தையும் ஒன்றாக கொரகொரப்பாக பொடிக்கவும்.

*பனை வெல்லத்தை துருவி நீர் ஊற்றி கொதிக்க வைத்த பின் வடிகட்டவும்.

*பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி 1 டேபிஸ்பூன் பொடித்த பொடியை போட்டு கொதிக்க வைக்கவும்.

*கொதித்த பின் வடிகட்டி பனை வெல்ல நீரை கலந்து சூடாக பருகவும்.

Related Videos